
இந்திய விடுதலைக்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் முற்றிலுமாக இழந்த மனிதன்.
கடைசி காலத்தில் ஆங்கிலேய நீதிபதி (justice Wallace) ஒருவரே உதவினார். அதன் நன்றிக்கடனாக தன் கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். அன்றாட வாழ்க்கைக்காக சட்ட புத்தகங்களை விற்கும் நிலைக்கு ஆளானார். அவர் ஒட்டிய கப்பலின் மதிப்பு இப்போதைய பண மதிப்பில் 5000 கோடியாகும்.
பாடப்புத்தகங்கள் கொடுக்கும் வரலாற்றை விட நேரடியாக களத்தில் காணும் வரலாறு எதையும் மறைக்கவோ, மடைமாற்றவோ முயலுவதில்லை.
என் குழந்தைளிடம் இவற்றை பற்றி பேசுகிறேன். அவர்களும் நிறைய கேள்விகள் கேட்கின்றனர்.
வரலாற்று மனிதர்களின் வழியாக வாழ்வியலைக் கற்றபடி...தொடர்கிறது... எங்கள் வரலாற்று பயணங்கள்..

No comments:
Post a Comment