Saturday, 1 June 2019

One’s destination is never a place, but a new way of seeing things.’ - Henry Miller
பயணம் என்பது ஒருவித உணர்வு,
பயணம் என்பது ஒருவித அறிவுச் சார்ந்த செயல்..
It is a feel and an act of intellect.
.
ஒவ்வொரு பயணமும் என்னை மறுவுருவாக்கம்/மீள்வுருவாக்கம் செய்கிறது.
என்னுள் நான் மீண்டும் மீண்டும் பிறக்கிறேன் அல்லது என்னை நானே பிரசவித்துக்கொள்பவனாகிறேன்.


சில நேரங்களில்...

ஈவு இரக்கமின்றி கல்வாரிக்கு இழுத்துசெல்லப்படுகிறேன்.
கொல்லப்பட்டு மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுபவனாகிறேன்.
பயணம் என்பது பரந்துபட்ட விசாலமான பார்வை.
பயணம் என்பது கட்டற்ற விடுதலை (சுதந்திரம்).
ஒரு இடத்தை மனதில் கொண்டு என் பயணத்தை நான் முடிவுசெய்வதில்லை. மாறாக என்னுள் ஏற்படும் மாற்றங்களின் ஊற்றுக்கண்களை மனதில் கொண்டே பயணம் செய்கிறேன்.

இதை நீங்கள் புரிந்துகொள்வது சற்றுக் கடினம் தான்.
புதிய பார்வைகளையும், புரிதல்களையும் ஒவ்வொரு நிலவெளியும் (landscape) என்னில் உருவாக்குகிறது.

சில நிலவெளிகளில் (certain landscape)..
ஒரு நேரம்...
மனிதர்களை அதீதமாய் நேசிப்பவனாகவும்
பிரிதொரு நேரம்
மனிதர்கள் தீவிரமாய் வெறுப்பவனாகவும்
என்னை நானே கண்டிருக்கிறேன்.

என் அதிமேதாவித் தனத்தை கிழித்தெரியும் பயணஙகளும் என் பாதையில் உண்டு.

No comments:

Post a Comment

பாளையங்களும் பாளையக்காரர்களும்

------------------------------------- Polingars and their territories - historical development and significance as a continuation of Nayak...