Saturday, 1 June 2019

எனது பயண அனுபவத்தில் வரலாறு வாசிப்பு/ புரிதல் என்பது...

எனது பயண அனுபவத்தில் வரலாறு வாசிப்பு/ புரிதல் என்பது எப்படிபட்ட விழிப்புணர்வை நம்மிடையே (கேட்பவரிடையே) கோருகிறது என்பதைப் பற்றி சிறு தகவல் ஒன்றை பகிர்கிறேன்.

விஜயநகரம் (விஜயநகரப் பேரரசு)
பாஞ்சாலங்குறிச்சி (கட்டபொம்மன்)
நெற்கட்டான்செவல் (பூலித்தேவன்
இம்மூன்றும் உருவானதற்கு சொல்லப்படும்
வாய்மொழி வரலாறு (கதை) ஒன்றே.

"முயல் வேட்டை நாயை எதிர்த்த இடத்தில் உருவானது"

இதிலிருந்து எனது பயணங்கள் ஒன்றைத் தெளிவாக்கியது. அதாவது...

"நம்பிக்கைகளைப் கதைகளாகப் புனைந்து பரப்புவார்கள். மெல்ல கதைகள் புராணவடிவம் பெறும். பின் புராணம் வரலாறாக திரிபு பெறும். திரிக்கப்பட்ட வரலாறு கிடைக்கும் சான்றுகள் கொண்டு மெறுகேற்றப்பட்டு உறுதிபடுத்தப்படும். உறுதிப்படுத்தப்பட்ட வரலாறு நேரிடையாகவோ மறைமுகமாகவோ தலைமுறைக்குள் திணிக்கப்படும்.
இதற்கான கருவிகளே மதங்களும், புனித புத்தகங்களும், கலாச்சாரங்களும்.... இத்தியாதி.....

No comments:

Post a Comment

பாளையங்களும் பாளையக்காரர்களும்

------------------------------------- Polingars and their territories - historical development and significance as a continuation of Nayak...